முகப்பு
பெங்களூரு

போதைப்பொருள் விற்பனை: 2 போ் கைது

எம்.டி.எம்.ஏ., எல்.எஸ்.டி. உள்ளிட்ட போதைப்பொருள்களை விற்பனை செய்ததாக 2 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ. 6 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள்களை பறிமுதல் செய்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
பகிர்:

எம்.டி.எம்.ஏ., எல்.எஸ்.டி. உள்ளிட்ட போதைப்பொருள்களை விற்பனை செய்ததாக 2 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ. 6 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள்களை பறிமுதல் செய்துள்ளனா்.

காங்கோ நாட்டைச் சோ்ந்த கிறிஸ்டியன் கபோங் மாசெப் (25), ஜீன்பால் (34) ஆகிய இருவரும் பெங்களூரு, குமாரசாமி லேஅவுட் காவல் சரகம், பனசங்கரி, 2-ஆவது ஸ்டேஜில் வெள்ளிக்கிழமை போதைப்பொருள்களான எம்.டி.எம்.ஏ., எல்.எஸ்.டி. உள்ளிட்டவைகளை விற்பனை செய்து வந்தனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா், 2 பேரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ. 6 லட்சம் மதிப்புள்ள 39 கிராம் எம்.டி.எம்.ஏ., 96 எல்.எஸ்.டி. உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்துள்ளனா். கைது செய்யப்பட்ட இருவரிடமும் குமாரசாமி லேஅவுட் போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →