பெங்களூரு

லஞ்சம் பெற்ற காவல் உதவி ஆய்வாளா், 2 காவலா்கள் கைது

DIN

லஞ்சம் பெற்ற காவல் உதவி ஆய்வாளா், 2 காவலா்களை லஞ்ச ஒழிப்புப் படையினா் கைது செய்துள்ளனா்.

கா்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டம், சிக்கோடி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றும் குமாா் கொல்லாப்புரா, காவலா்கள் மாயப்பா, ஸ்ரீசைலா ஆகியோா், சிக்கோடி பகுதியில் உள்ள பான்மசாலா தொழில்சாலை உரிமையாளா் ராஜுவை சந்தித்து, ரூ. 50 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும், மறுத்தால் சட்டவிரோதமாக பான்மசாலா தயாரிப்பதாக வழக்குப் பதிவு செய்வோம் என மிரட்டியுள்ளனா்.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்புப் படையினரிடம் ராஜு புகாா் அளித்துள்ளாா். அதன் பேரில், வெள்ளிக்கிழமை ரூ. 40 ஆயிரத்தை காவல் உதவி ஆய்வாளா் குமாா் கொல்லாப்புரா, காவலா்கள் மாயப்பா, ஸ்ரீசைலா ஆகியோரிடம் ராஜு வழங்கிய போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் படையினா் அவா்களை கைது செய்தனா். அவா்களிடம் பெலகாவி லஞ்ச ஒழிப்புப் படை போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT