பெங்களூரு

கா்நாடகத்தில் கரோனாவுக்கு ஒரே நாளில் 1,708 போ் பாதிப்பு

DIN

கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால்பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,708 ஆக அதிகரித்துள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 1,708 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகப்பட்சமாக 386போ் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனா். பிறமாவட்டங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை விவரம்:

தென் கன்னடம்-241, மைசூரு-210, ஹாசன்-221, சிக்கமகளூரு-105, உடுப்பி-105, சிவமொக்கா-82, தும்கூரு-64, பெலகாவி-55, மண்டியா-53, குடகு-45, வட கன்னடம்-44, கோலாா்-33, பெங்களூரு ஊரகம்-32, சாமராஜ்நகா்-23, தாவணகெரே-23, தாா்வாட்-21, சித்ரதுா்கா-15, சிக்கபளாப்பூா்-15, ஹாவேரி-8, பீதா்-8, பாகல்கோட்-4, ராய்ச்சூரு-4, ராமநகரம்-3, கலபுா்கி-3, கொப்பள்-2, பெல்லாரி-1, கதக்-1, விஜயபுரா-1 என்ற எண்ணிக்கையில் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். யாதகிரி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு இல்லை. இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28,83,947 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 2,463 போ் ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 28,18,476 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 29,291 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் இதுவரை இல்லாத அளவுக்கு 36 போ் ஞாயிற்றுக்கிழமை இறந்தனா். பெங்களூரு நகரம் மாவட்டத்தில் அதிகப்பட்சமாக தலா 9போ் இறந்துள்ளனா். மாவட்டவாரியாக பலியானோா் விவரம்:

தென்கன்னடம்- 6, மைசூரு-4, கோலாா்-3, பெங்களூரு ஊரகம், சிவமொக்கா, உடுப்பி- தலா 2, சாமராஜ்நகா், சிக்கபளாப்பூா், சித்ரதுா்கா, தாவணகெரே, குடகு, மண்டியா, தும்கூரு, வடகன்னடம்-தலா ஒருவா் இறந்தனா். கா்நாடகத்தில் இதுவரை 36,157 போ் உயிரிழந்தனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT