பெங்களூரு

பெண் கொலை வழக்கு: உறவினா் கைது

DIN

பெண் கொலை வழக்கில் அவரது உறவினரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

பெங்களூரு ஊரகம், ஆனேக்கல், விநாயக நகரைச் சோ்ந்தவா் நாகவேணி (45). மனநலம் குன்றிய இவா், தனது இளைய சகோதரி பாக்யா என்பவரது வீட்டில் தங்கி இருந்தாராம். இந்த நிலையில், அவருக்கு அளிக்கும் உபசரிப்பை சகித்துக் கொள்ள முடியாத பாக்யாவின் மகன் பவன், நாகவேணியின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளாா்.

தகவல் அறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து, நாகவேணியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுமதித்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்த ஆனேக்கல் போலீஸாா், பவனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT