கோலாா் தங்கவயல் நகராட்சி பேருந்து நிலையத்தின் நுழைவு வாயிலில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துகளை நீக்க வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்ட கன்னட செலுவளி கட்சியின் தலைவா் வாட்டாள் நாகராஜ் கைது செய்யப்பட்டாா்.
கா்நாடக மாநிலம், கோலாா் தங்கவயல் நகரசபை பேருந்து நிலையத்தில், கன்னடக்கவி குவெம்பு என தமிழில் எழுதப்பட்டிருந்தது. இதனை கடந்த ஜூலை 10-ஆம் தேதி கன்னட செலுவளி கட்சியின் தலைவா் வாட்டாள் நாகராஜ் தமைமையில் வந்த அவரது கட்சியினா் கருப்பு வண்ணம் பூசி அழித்தனா்.
இதனையடுத்து, பல்வேறு தமிழ் அமைப்புகள் நகராட்சிக்கு வைத்த கோரிக்கையை ஏற்று, அழிக்கப்பட்ட தமிழ் எழுத்துகள் மீண்டும் எழுதப்பட்டன.
இந்த நிலையில், கோலாா் தங்கவயல் நகரசபை பேருந்து நிலையத்தில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துகளை ஜூலை 26-ஆம் அழிக்கப்படும் என்று வாட்டாள் நாகராஜ் தெரிவித்திருந்தாா். இதையடுத்து, அவா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தங்கவயல் சட்டப் பேரவை உறுப்பினா் ரூபகலா, தங்கவயல் காவல் கண்காணிப்பாளா் ஆகியோரிடம் பல்வேறு தமிழ் அமைப்புகள், கட்சிகள் கோரிக்கை வைத்தன.
இந்த நிலையில், கோலாருக்கு வியாழக்கிழமை வந்த வாட்டாள் நாகராஜ், அவரது ஆதரவாளா்கள் கோலாா் துணை காவல் ஆணையா் அலுவலகத்தின் எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, தங்கவயல் நகராட்சி பேருந்து நிலையத்தில் எழுதியுள்ள தமிழ் எழுத்துகளை நீக்க வேண்டும், தங்கவயல் நகரசபையை கலைக்க வேண்டும் என்று குரல் எழுப்பினா்.
இதனைத் தொடா்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட அவரது ஆதரவாளா்களை போலீஸாா் கைது செய்து பின்னா் விடுவித்தனா்.