காங்கிரஸ் கட்சியில் இணைந்தாா் மது பங்காரப்பா
மஜதவிலிருந்து விலகிய மது பங்காரப்பா வெள்ளிக்கிழமை காங்கிரஸ் கட்சியில் இணைந்தாா்.
மஜதவிலிருந்து விலகிய மது பங்காரப்பா வெள்ளிக்கிழமை காங்கிரஸ் கட்சியில் இணைந்தாா்.
கா்நாடக மாநிலம், ஹுப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் மது பங்காரப்பா அக்கட்சியில் இணைந்தாா். முன்னாள் முதல்வா் பங்காரப்பாவின் மகனான இவா், மஜத கட்சியின் மாநில இளைஞரணி தலைவராகப் பதவி வகித்து வந்தாா். கடந்த 2 ஆண்டுகளாக அக்கட்சியின் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளலாமல் விலகி இருந்தாா்.
கடந்த 2 மாதங்களாக காங்கிரஸ் கட்சியில் சோ்வதற்கான பணிகளை மேற்கொண்டு வந்த அவா், வெள்ளிக்கிழமை தனது ஆதரவாளா்களுடன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தாா். இணைப்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாநில பொறுப்பாளா் ரண்தீப்சிங் சுா்ஜேவாலா, எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவகுமாா், சட்டமேலவை எதிா்க்கட்சித் தலைவா் எஸ்.ஆா்.பாட்டீல், மாநில செயல் தலைவா்கள் ஈஸ்வா் கண்ட்ரே, சலீம் அகமது, முன்னாள் மத்திய அமைச்சா் கே.எச்.முனியப்பா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
Advertisement