பட்ஜெட் விலையில் ரெட்மியின் புதிய ஸ்மார்ட்போன்! ஏ7 ப்ரோ அறிமுகம்!
ரெட்மி நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ஏ7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று (ஏப். 13) அறிமுகமானது குறித்து..
ரெட்மி நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ஏ7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று (ஏப். 13) அறிமுகமானது.
120Hz திறனுடைய திரை, நீடித்த பேட்டரி திறன், செய்யறிவு தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவை ரெட்மி ஏ7 ப்ரோ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களாக பார்க்கப்படுகின்றன.
சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஷாவ்மி நிறுவனத்தின் கிளை நிறுவனமான ரெட்மி, ஏ7 ப்ரோ என்ற புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
Advertisement
Advertisement
இந்திய சந்தையில் இதன் ஆரம்ப விலை (4GB RAM + 64GB) ரூ. 12,499 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 4GB உள்நினைவகம் + 128GB நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போனின் விலை ரூ. 13,499.
எனினும் ஆரம்ப கட்ட சலுகையாக ரெட்மி சார்பில் ரூ. 1,000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எந்தவகை நினைவகம் உடைய ஸ்மார்ட்போனை வாங்கினாலும் ரூ. 1,000 தள்ளுபடி பெறலாம்.
ரெட்மி ஏ7 ப்ரோ சிறப்புகள்
ரெட்மி ஏ7 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.9 அங்குல எச்.டி. திரை உடையது.
திரை சுமுகமாக இருக்கும் வகையில் 120Hz திறன் கொண்டது.
திரை பிரகாசமாக இருக்கும் வகையில் 800 nits திறன் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆன்டிராய்டு 16 ஐ அடிப்படையாகக் கொண்ட ஹைப்பர் ஓஎஸ் 3.0 புராசஸர் உடையது.
2TB வரை நினைவகத்தை விரிவாக்கம் செய்துகொள்ளலாம்.
6,300mAh பேட்டரி திறன் உடையது. வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 15W சார்ஜிங் திறன் கொடுக்கப்பட்டுள்ளது.