மகளிர் இடஒதுக்கீடு: தேர்தல் நேரத்தில் அவையைக் கூட்டுவது அவசியமா? - திமுக
தேர்தல் நடக்கும் இந்த நேரத்தில் நாடாளுமன்ற அவையைக் கூட்டுவது ஏன்? என்ற கேள்வியை திமுக எழுப்பியது குறித்து...
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக செயல்படுவார்கள் என்று தெரிந்தே, அவையை உடனடியாகக் கூட்டுவதற்கான அவசியம் ஏன்? என்ற கேள்வியை திமுக செய்தித் தொடர்புக் குழுத் தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு வரும் ஏப்.16 முதல் 18 வரை நடைபெற இருக்கிறது. நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் 2029-ஆம் ஆண்டு முதல் 33 சதவிகித மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்தவும், மகளிருக்கு 273 இடங்களை ஒதுக்கும் வகையில் மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 816-ஆக உயர்த்துவதற்குமான மசோதாவை முன்வைப்பதை இந்த மூன்று நாள் சிறப்புக் கூட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதுகுறித்து திமுக செய்தித் தொடர்புக் குழுத் தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறுகையில், “மத்திய அரசு தொகுதி மறுவரையறையில் கவனம் செலுத்துகிறது. வெகு நாள்களுக்கு முன்பே மகளிர் இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேற்றுப்பட்டு விட்டது. மாநிலங்களவையில் மட்டும்தான் நிலுவையில் உள்ளது.
Advertisement
Advertisement
அந்த மசோதா எதுவாக இருந்தாலும், தமிழகம், கேரளம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களை எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்கிறபோதும் மக்கள் பிரசாரத்தில் மிகவும் மும்முரமாக இருக்கின்றனர்.
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக இருப்பார்கள் என்று தெரிந்தே தற்போது ஏன் நாடாளுமன்ற அவையைக் கூட்ட வேண்டும். ஏனென்றால், மாநிலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது” எனத் தெரிவித்தார்.