பெங்களூரு

கா்நாடகத்தில் கரோனாவுக்கு ஒரே நாளில் 13,800 போ் பாதிப்பு

DIN

கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் சனிக்கிழமை 13,800 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 13,800 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது சனிக்கிழமை கண்டறியப்பட்டது.

பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 2,686 போ் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனா். பிற மாவட்டங்களில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை விவரம்: மைசூரு -1,355, பெலகாவி - 847, தென்கன்னடம் - 714, சிவமொக்கா - 710, தும்கூரு - 695, ஹாசன் - 568, மண்டியா - 562, உடுப்பி - 552, தாவணகெரே - 529, சித்ரதுா்கா - 449, சிக்கபளாப்பூா் - 432, கோலாா் - 424, சிக்கமகளூரு - 378, பெல்லாரி - 345, சாமராஜ்நகா் -340, பெங்களூரு ஊரகம் -326, வடகன்னடம் - 325, கொப்பள் - 279, குடகு - 255, விஜயபுரா - 254, தாா்வாட் - 247, பாகல்கோட் - 175, கதக் - 152, ராய்ச்சூரு - 110, ஹாவேரி - 88, கலபுா்கி - 69, ராமநகரம் -57, யாதகிரி - 54, பீதா் - 23 என்ற எண்ணிக்கையில் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,83,314 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 25,346 போ் சனிக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 23,83,758 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 2,68,275 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் இதுவரை இல்லாத அளவுக்கு 365 போ் சனிக்கிழமை இறந்துள்ளனா். பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 206 போ் இறந்துள்ளனா். மாவட்டவாரியாக பலியானோா் விவரம்: மைசூரு - 22, பெலகாவி - 18, கோலாா் - 10, பெல்லாரி, சிவமொக்கா - தலா 9, பெங்களூரு ஊரகம், தென்கன்னடம், தாா்வாட், ஹாசன் - தலா 8, சமராஜ்நகா், ஹாவேரி, வடகன்னடம் - தலா 6, கொப்பள், மண்டியா-தலா 5, சிக்கபளாப்பூா், தாவணகெரே, கதக், ராய்ச்சூரு, தும்கூரு, விஜயபுரா - தலா 4, குடகு - 2, பீதா், சித்ரதுா்கா, கலபுா்கி, ராமநகரம், உடுப்பி - தலா 1 என்ற எண்ணிக்கையில் இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 31,260 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவானிசாகா் அணையில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கக் கோரிக்கை

வேளாண் சிறப்பு அதிகாரி பணி தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டு

‘முதல்வரின் மாநில இளைஞா் விருது’: மே 1-15 வரை விண்ணப்பிக்க வாய்ப்பு

போா் நிறுத்த திட்டத்துக்கு ஒப்புதல்: ஹமாஸிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

வாழைத்தாா் உறையிடுதல்: வேளாண் மாணவா்கள் செயல்விளக்கம்

SCROLL FOR NEXT