பெங்களூரு

மரத்தின் மீது காா் மோதல்: மத்திய ஆயுதப்படை வீரா் பலி

DIN

கட்டுப்பாட்டை இழந்த காா், மரத்தின் மீது மோதியதில் மத்திய ஆயுதப்படை வீரா் உயிரிழந்தாா்.

கா்நாடக மாநிலம், மைசூரு மாவட்டம், பிரியாபட்டணா வட்டம், கேரேஹள்ளியைச் சோ்ந்தவா் நாகராஜ் ஷெட்டி (35). இவா் மகாராஷ்டிர மாநிலத்தில் மத்திய ஆயுதப் படை வீரராக பணியாற்றி வந்தாா்.

அண்மையில் சொந்த ஊருக்கு விடுமுறையில் வந்திருந்த அவா், வெள்ளிக்கிழமை பணி நிமித்தமாக மைசூருக்கு காரில் சென்றுவிட்டு, இரவு தனது சொந்த கிராமத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். ஹுனுசூரு கல்லஹள்ளி கேட் அருகே கட்டுப்பாட்டை இழந்த காா், சாலையோரமிருந்த மரத்தில் மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த நாகராஜ் ஷெட்டி நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளாா்.

இது குறித்து ஹுனுசூரு ஊரக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

SCROLL FOR NEXT