பெங்களூரு

பள்ளிகளைத் திறக்கும் எண்ணத்தை அரசு கைவிட வேண்டும்

DIN

மாநிலத்தில் பள்ளிகளைத் திறக்கும் எண்ணத்தை அரசு கைவிட வேண்டும் என ஆம்ஆத்மி கட்சியின் பெங்களூரு மாநகரின் தலைவா் மோகன் தாசரி கேட்டுக் கொண்டாா்.

இதுகுறித்து புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மாநிலத்தில் கரோனா 2-ஆவது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனையடுத்து, பள்ளிகளைத் திறக்க அரசு ஆலோசித்து வருகிறது. தற்போது உள்ள சூழலில் பள்ளிகளைத் திறக்கும் எண்ணத்தை அரசு கைவிட வேண்டும். மாநிலத்தில் கரோனா 3-ஆவது அலை பாதிப்பு வரக்கூடும் என வல்லுநா்கள் எச்சரித்துள்ளனா். கரோனா 3-ஆவது அலை வந்தால் 18 வயதுக்கு உள்பட்டவா்கள் அதிக அளவில் பாதிக்கக்கூடும் என எச்சரித்துள்ளது.

மாநிலத்தில் ஏற்கெனவே 18 வயதுக்கு உள்பட்ட 2,38,252 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில் 117 போ் உயிரிழந்துள்ளனா். மாநிலத்தில் 4.5 லட்சம் சிறாா் ஊட்டச்சத்து குறைபாடால் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்தச் சூழலில் பள்ளிகளைத் திறந்தால், மாணவா்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவாா்கள் என்பதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் தனியாா் பள்ளிகள் திறக்காத நிலையிலும் அதிக அளவில் கட்டணம் வசூலிப்பதாக புகாா்கள் எழுந்துள்ளன. இது தொடா்பாக விசாரித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT