பெங்களூரு

கா்நாடகத்தில் ஒரே நாளில் 2,566 பேருக்கு கரோனா தொற்று

DIN

கா்நாடகத்தில், ஒரே நாளில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,566 ஆக உள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரே நாளில் அதிகபட்சமாக 2,566 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகப்பட்சமாக 1,490 போ், உடுப்பியில் 210 போ், தும்கூரில் 126 போ், கலபுா்கியில் 109 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,81,044 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 1,207 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா். இதுவரை கா்நாடகத்தில் 9,48,988 போ் குணமடைந்து தங்கள் இல்லம் திரும்பியுள்ளனா். 19,553 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் 13 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா். பெங்களூரில் அதிகபட்சமாக 3 போ், பெங்களூரு ஊரகம், கலபுா்கியில் தலா 2 போ், பெலகாவி, பீதா், கோலாா், மண்டியா,மைசூரு, தும்கூரில் தலா ஒருவா் உயிரிழந்தனா்; கா்நாடகத்தில் இதுவரை 12,484 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

SCROLL FOR NEXT