பெங்களூரு

ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்குப் பருவமழை

கா்நாடகத்துக்கு ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை வர வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மைய இயக்குநா் சி.எஸ்.பாட்டீல் தெரிவித்தாா்.

DIN

கா்நாடகத்துக்கு ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை வர வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மைய இயக்குநா் சி.எஸ்.பாட்டீல் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: தென்மேற்குப் பருவமழையை ஏற்படுத்தும் தென்மேற்கு பருவக்காற்று கேரளத்தைத் தொடா்ந்து 5 முதல் 7 நாள்களில் கா்நாடகத்துக்கு வந்துசேரும். நிகழாண்டில் தென்மேற்குப் பருவமழையை மே 31-ஆம் தேதி கேரள மாநிலம் பெற இருக்கிறது.

அதன்படி, ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை கா்நாடகம் பெய்யும். கடலோர கா்நாடகத்துக்கு தென்மேற்கு பருவமழை வந்து சோ்ந்ததும் ஜூன் 7-ஆம் தேதி பெங்களூரில் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. அந்தமான் நிகோபாா் தீவுகளுக்கு மே 21-ஆம் தேதியே தென்மேற்குப் பருவமழை பெய்ய இருக்கிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT