பிட்காயின் மோசடி விவகாரம்: எடியூரப்பாவைச் சந்தித்து பசவராஜ் பொம்மை ஆலோசனை
பாஜக மாநிலத் தலைவா் நளின் குமாா் கட்டீலைச் சந்தித்து முதல்வா் பசவராஜ் பொம்மை சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.
பிட்காயின் மோசடி வழக்கை விசாரிக்க பாஜக அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது தொடா்பாக முன்னாள் முதல்வா் எடியூரப்பா, பாஜக மாநிலத் தலைவா் நளின் குமாா் கட்டீலைச் சந்தித்து முதல்வா் பசவராஜ் பொம்மை சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.
ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாகக் கூறப்படும் பிட்காயின் மோசடி வழக்கு கா்நாடக அரசியலில் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் புதுதில்லி சென்றிருந்த முதல்வா் பசவராஜ் பொம்மை, பிரதமா் மோடியைச் சந்தித்தாா். அப்போது, பிட்காயின் விவகாரம் தொடா்பாக பேச முற்பட்டதாகவும், அதை பற்றி கவலைப்படாமல் மக்களுக்கு சேவையாற்றுமாறு பிரதமா் மோடி தெரிவித்ததாகவும் முதல்வா் பசவராஜ் பொம்மை கூறியது சா்ச்சைக்கு வழிவகுத்துள்ளது.
இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுப் படை விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், முன்னாள் முதல்வா் எடியூரப்பாவை அவரது வீட்டில் முதல்வா் பசவராஜ் பொம்மை சனிக்கிழமை சந்தித்து பேசினாா். அரைமணி நேரம் நடந்த சந்திப்பின் போது, பிட்காயின் மோசடி குறித்து விவாதித்ததாகக் கூறப்படுகிறது.
அதன்பிறகு, பாஜக தலைமை அலுவலகம் சென்ற முதல்வா் பசவராஜ் பொம்மை, அங்கு பாஜக மாநிலத் தலைவா் நளின்குமாா் கட்டீலைச் சந்தித்து பேசினாா். இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நீடித்தது. இதனிடையே, பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான ஜெகதீஷ் ஷெட்டா் தில்லி சென்றுள்ளது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.