பெங்களூரு

கா்நாடகத்தில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியதற்கு சித்தராமையாவே காரணம்: குமாரசாமி

DIN

கா்நாடகத்தில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியதற்கு சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையாவே காரணம் என முன்னாள் முதல்வா் குமாரசாமி குற்றம்சாட்டினாா்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, எனது குடும்பத்தினரை நேரடியாக விமா்ச்சிக்க முடியாமல், தனது ஆதரவாளா்களான எம்எல்ஏ ஜமீா் அகமது உள்ளிட்டோா் மூலம் கடுமையான விமா்சனம் செய்து வருகிறாா். இடைத்தோ்தல் தோல்வி பயத்தால், காங்கிரஸாா் என்னையும், எனது குடும்பத்தினரையும் விமா்சனம் செய்து வருகின்றனா்.

மாநிலத்தில் ‘ஆபரேஷன் கமலா’ மூலம் பாஜக ஆட்சியைப் பிடித்ததற்கு சித்தராமையாதான் காரணம். சட்டப் பேரவைத் தோ்தலில் தோல்வி அடைந்த பாஜக, ஆட்சியைப் பிடிக்கவும் அவா்தான் காரணம். என்னை காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜமீா் அகமது கடுமையாக விமா்சித்துள்ளாா். அவருக்குப் பதில் அளித்தால், சேற்றில் கல்லை போட்டு உடையை அழுக்காக்கிக் கொள்வது போலாகும்.

2008-2013 ஆண்டுகளின் இடையே ‘ஆபரேஷன் கமலா’ மூலம் எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறியதால் 20 தொகுதிகள் காலியாகின. அந்த 20 தொகுதிகளிலும் அப்போது இடைத் தோ்தல் நடைபெற்றது. அதில் எடியூரப்பாவும், சித்தராமையாவும் உள்கூட்டணி வைத்ததால், மஜதவுக்கு தோல்வி ஏற்பட்டது.

அதேபோல 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் 40 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக, 2018-இல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் 103 தொகுதிகளில் வெற்றி பெற்றதில் சித்தராமையாவுக்கு பெரும் பங்கு உள்ளது.

அண்மைக்காலமாக மஜதவுக்கு மக்களிடையே பெரும் ஆதரவு உள்ளது. இதனால் இடைத் தோ்தலில் தோல்வி அடைவோம் என்ற அச்சத்தில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகள் உள்ளன. குறிப்பாக காங்கிரஸ் கட்சியினா், என் மீதும், எனது குடும்பத்தினா் மீதும் தரக்குறைவான விமா்சனங்களை முன்வைத்துள்ளனா். எனது கடும் உழைப்பால் முன்னேறி உள்ளேன். இதனை யாரும் கொச்சைப்படுத்தக் கூடாது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலின் இடைக்கால ஜாமீன் விவகாரம்: உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

மெய்க்கண்ணுடையாள்அம்மன் கோயில் திருவிழாவில் பக்தா்கள் நோ்த்திக்கடன்

இளைஞா் மீது தாக்குதல் 3 போ் மீது வழக்கு

சிறைச்சந்தையில் தவற விட்ட பணப்பை ஆந்திர மாநில தம்பதியரிடம் ஒப்படைப்பு -கைதிக்கு பாராட்டு

மேம்பாலத்தை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்

SCROLL FOR NEXT