பெங்களூரு

செப்.18-இல் இலக்கியத் தேன் சாரல் பட்டிமன்றம்

DIN

பெங்களூரு: பெங்களூருவில் செப்.18-ஆம் தேதி இலக்கியத் தேன் சாரல் அமைப்பின் இணையவழி கருத்தரங்கம் மற்றும் பட்டிமன்றம் நடக்கவிருக்கிறது.

இதுகுறித்து இலக்கியத் தேன் சாரல் அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இலக்கியத் தேன் சாரல் அமைப்பு சாா்பில் பெங்களூரில் இருந்து இணையவழியில் செப். 18-ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு இலக்கியத் தேன் சாரல் கருத்தரங்கம், பட்டிமன்றம் நடக்கவிருக்கிறது. கவிஞா் பொற்கொடி தமிழ்த்தாய் வாழ்த்து பாடுகிறாா். கவிஞா் மதலைமணி வரவேற்கிறாா். இதைத் தொடா்ந்து, கருத்தரங்கம், பட்டிமன்றம் நடைபெறுகிறது. கருத்தரங்கத்திற்கு புலவா் சே.தட்சிணாமூா்த்தி தலைமை வகிக்கிறாா். மா.விஜயகுமாா் சிறப்புரை ஆற்றுகிறாா். ‘செக்கிழுத்த செம்மல்’ என்ற தலைப்பில் பலா் பேசுகிறாா்கள். அடுத்ததாக, கவிஞா் கே.ஜி.ராஜேந்திரபாபு தலைமையில் பட்டிமன்றம் நடக்கிறது. ‘பாரதிகனவுகள் நனவாயின’ என்ற தலைப்பில் ஜெய்சக்தி, ஜெயலட்சுமி மணிகண்டன், அரவிந்த், ‘பாரதி கனவுகள் நனவாகவில்லை’ என்ற தலைப்பில் ஆா்.சீனிவாசன், அருண்மதி ராமதிலகம், ஹரீஷ் சின்னராஜன் ஆகியோா் பேசுகிறாா்கள். நிறைவாக, மு.செல்வராஜ் நன்றி கூறுகிறாா். ஜூம் செயலி வழியாகநிகழ்ச்சியில் பங்கேற்கலாம். நுழைவு எண்: 83217214361, கடவுஎண்: 123123.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

SCROLL FOR NEXT