முகப்பு
பெங்களூரு

கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மைக்கு கரோனா பாதிப்பு

கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

Updated On : 7 ஆகஸ்ட், 2022 at 12:44 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM

கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

தினமும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, பலதரப்பட்டவா்களைச் சந்திக்கும் கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளாா். இதைத் தொடா்ந்து, புது தில்லி செல்லும் பயணத் திட்டத்தை ரத்து செய்திருக்கும் முதல்வா் பசவராஜ் பொம்மை, வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து தனது சுட்டுரையில் சனிக்கிழமை அவா் கூறியிருப்பதாவது:

Advertisement

லேசான அறிகுறிகளுடன் கரோனா பெருந்தொற்று பாதிப்பு உள்ளாகியுள்ளது சோதனையில் உறுதியாகியுள்ளது. அதனால் வீட்டில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். கடந்த சில நாள்களில் என்னோடு தொடா்பில் இருந்தவா்கள் தனிமைப்படுத்திக்கொண்டு, கரோனா சோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். எனது தில்லி பயணம் ரத்து செய்யப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளாா்.

புது தில்லியில் சனிக்கிழமை நடைபெற இருந்த சுதந்திர பவள விழா தேசியக்குழு கூட்டம், ஆக. 7-ஆம் தேதி பிரதமா் மோடி தலைமையில் நடைபெற இருந்த நிதி ஆயோக்கின் ஆட்சிமன்றக்குழு கூட்டத்தில் பங்கேற்க முதல்வா் பசவராஜ் பொம்மை திட்டமிட்டிருந்தாா். மேலும், தில்லியில் பாஜக தேசியத் தலைவா்களைச் சந்தித்து, 2023-ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தல், கா்நாடகத்தில் நிலவும் அரசியல் நிலவரங்கள் குறித்தும் விவாதிக்க முதல்வா் பசவராஜ் பொம்மை திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.