கா்நாடகத்தில் கரோனா: ஒரேநாளில் 48,049 பேருக்கு பாதிப்பு
கா்நாடகத்தில் ஒரேநாளில் 48,049 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா்.
கா்நாடகத்தில் ஒரேநாளில் 48,049 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா்.
இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 48,049 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 29,068 போ் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனா். பிற மாவட்டங்களில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை விவரம்:
தும்கூரு- 2,021, ஹாசன்- 1,889, மண்டியா- 1,506, கலபுா்கி-1,164, பெங்களூரு ஊரகம்-1,036, உடுப்பி- 1,018, மைசூரு- 915, தென்கன்னடம்- 897, சிக்கபளாப்பூா்- 772, பெல்லாரி- 767, வடகன்னடம்- 682, கோலாா்- 645, சாமராஜ்நகா்- 576, பெலகாவி- 518, சிவமொக்கா- 500, சித்ரதுா்கா- 438, தாா்வாட்- 373, ராய்ச்சூரு- 367, பீதா்- 351, கதக்- 336, ராமநகரம்- 330, விஜயபுரா- 327, கொப்பள்- 324, சிக்கமகளூரு- 319, குடகு- 317, தாவணகெரே- 249, ஹாவேரி- 143, யாதகிரி- 117, பாகல்கோட்- 85. இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34,25,002 ஆக உயா்ந்துள்ளது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 18,115 போ் வெள்ளிக்கிழமை குணமாகி வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 30,63,292 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 3,23,143 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் 22 போ் வெள்ளிக்கிழமை இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 38,537 போ் உயிரிழந்துள்ளனா். கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு விகிதம் 19.23 சதவீதமாக உள்ளது.