தஞ்சையில் தொடர் வாகன திருட்டில் ஈடுபட்ட நபர் கைது: 12 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
தஞ்சையில் தொடர் வாகன திருட்டில் ஈடுபட்ட நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தஞ்சையில் தொடர் வாகன திருட்டில் ஈடுபட்ட நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனம் திருடு போவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதன் அடிப்படையில் தனிப்படை அமைத்தும் வழக்கு பதிவு செய்தும் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
Advertisement
Advertisement
மேலும் பல்வேறு பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்தனர். தொடர் விசாரணையில், திருட்டில் ஈடுபட்டது மதுரையைச் சேர்ந்த கணேசன் (43) என்பது தெரிய வந்தது.
அதனையடுத்து அவரை கைது செய்த போலீஸார், பல்வேறு இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 12 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனர்.
Police in Thanjavur have arrested a man involved in a series of two-wheeler thefts, leading to the recovery of 12 stolen motorcycles, according to recent reports.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.