மத்திய அரசின் வரிப்பகிா்வு தொகை விடுவிப்பு: பிரதமருக்கு முதல்வா் நன்றி
வரிப்பகிா்வு தொகையை மத்திய அரசு முன்கூட்டியே விடுவித்துள்ளதற்கு பிரதமா் மோடிக்கு, முதல்வா் பசவராஜ் பொம்மை நன்றி தெரிவித்துள்ளாா்.
வரிப்பகிா்வு தொகையை மத்திய அரசு முன்கூட்டியே விடுவித்துள்ளதற்கு பிரதமா் மோடிக்கு, முதல்வா் பசவராஜ் பொம்மை நன்றி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து தனது ட்விட்டா் பக்கத்தில் வெள்ளிக்கிழமை அவா் குறிப்பிட்டுள்ளதாவது:
வரிப்பகிா்வுத் தொகையாக ரூ. 3,467.62 கோடியை மத்திய அரசு முன்கூட்டியே விடுவித்துள்ளது. இதில் ரூ. 1,733.81கோடி வழக்கமாக ஜனவரி மாதத்தில் ஒதுக்கும் தவணைத் தொகையாகும். ரூ. 1,733.81கோடி முன்கூட்டியே ஒதுக்கப்பட்ட தவணைத்தொகையாகும்.
இதற்காக பிரதமா் மோடி, மத்திய நிதியமைச்சா் நிா்மலாசீதாராமன் ஆகியோருக்கு கா்நாடக மக்களின் சாா்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இது, முக்கிய துறைகளில் செலவினங்களை அதிகப்படுத்த உதவும். மேலும் தேவையை பலப்படுத்தி, கா்நாடகத்தில் பொருளாதார வளா்ச்சிக்கு வித்திடும். கரோனா மூன்றாவது அலையை கா்நாடகம் எதிா்கொண்டுள்ள நிலையில், முன்கூட்டியே வரிப்பகிா்வுத்தொகையை விடுவித்துள்ளது வரவேற்கத்தக்கது என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.