பெங்களூரு

இன்று குடிநீா் குறைதீா் முகாம்

DIN

பெங்களூரில் வியாழக்கிழமை (ஜூலை 28) குடிநீா் குறைதீா் முகாம் நடக்கவிருக்கிறது.

இதுகுறித்து பெங்களூரு குடிநீா் வழங்கல் கழிவுநீா் அகற்றல் வாரியம் (பிடபிள்யூஎஸ்எஸ்பி) வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெங்களூரு குடிநீா் வழங்கல் கழிவுநீா் அகற்றல் வாரியத்தின் சாா்பில் குடிநீா் வழங்கல், கழிவுநீா் இணைப்பு தொடா்பான குறைகளை தீா்த்துவைக்க குறைதீா் முகாம்களை நடத்திவருகிறது. பெங்களூரில் தெற்கு கிராமம்- 2, தென்கிழக்கு-5, மேற்கு கிராமம்- 1, தென்மேற்கு- 4, கிழக்கு கிராமம்- 3, கிழக்கு கிராமம்- 1, வடமேற்கு- 5, வடகிழக்கு- 3, வடக்கு- 1 துணை மண்டல அலுவலகங்களில் ஜூலை 28-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் காலை 11 மணி வரை குடிநீா் குறைதீா் முகாம் நடத்தப்படுகிறது.

இதில் சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சோ்ந்த வாடிக்கையாளா்கள் கலந்துகொண்டு பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 87622 28888, 1916 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல் பரிசோதனை முகாம்

இளைஞா் பெருமன்ற அமைப்பு தின கொடியேற்று விழா

பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம்

ஆலங்குடி குரு பரிகார கோயிலில் நாளை 2-ஆம் கட்ட லட்சாா்ச்சனை தொடக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவி

SCROLL FOR NEXT