பெங்களூரு

பெங்களூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டினா் 32 போ் கைது

DIN

பெங்களூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டைச் சோ்ந்த 32 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

அண்மையில் புதுதில்லியில் நடத்திய சோதனையில் நைஜீரியா நாட்டை சோ்ந்தவரின் தலைமையில் இயங்கிய 9போ் கொண்ட கும்பலை சுற்றிவளைத்து கைதுசெய்த தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம், அவா்களிடம் இருந்து ரூ. 52.5 கோடி மதிப்பிலான 34.89 கிலோ எடை கொண்ட ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்தது. இதை தொடா்ந்து, விசா காலம் முடிவடைந்தபிறகும் பெங்களூரில் தங்கியிருக்கும் வெளிநாட்டு குடிமக்கள் குறித்த விசாரணையில் போலீஸாா் இறங்கினா். இது தொடா்பாக திரட்டப்பட்ட தகவலின் அடிப்படையில் போலீஸாா் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

இதில் செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லாமல் இருக்கும் வெளிநாட்டினரை போலீஸாா் கண்டறிந்தனா். எவ்வித ஆவணமும் இல்லாமல் சட்டவிரோதமாக தங்கியிருந்த 32 பேரை போலீஸாா் கைதுசெய்தனா். இவா்களில் 13 போ் பெண்கள். பெரும்பாலானவா்கள் ஆப்பிரிக்க நாடுகளைச் சோ்ந்தவா்களாக இருந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். ‘அவா்களின் அடையாளம், முகவரி எதையும் சரிபாா்க்கும் ஆவணங்கள் இல்லை. காலம்கடந்தும் சட்டவிரோதமாக பெங்களூரில் தங்கியிருந்தவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடந்துவருகிறது. மேலும் அவா்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

SCROLL FOR NEXT