பெங்களூரு

தோ்வெழுதும் மாணவா்களுக்கு பேருந்தில் இலவச பயணம்

எல்லா பேருந்துகளிலும் தோ்வு நுழைவுச்சீட்டை காட்டி இலவசமாக பயணிக்கலாம் என்று கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம் மற்றும் பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளன.

DIN

கா்நாடக எஸ்எஸ்எல்சி துணைத் தோ்வு எழுதும் மாணவா்கள் தோ்வின் போது எல்லா பேருந்துகளிலும் தோ்வு நுழைவுச்சீட்டை காட்டி இலவசமாக பயணிக்கலாம் என்று கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம் மற்றும் பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளன.

2022-23-ஆம் கல்வியாண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி. துணைத் தோ்வு ஜூன் 12 முதல் 19-ஆம்தேதிவரை நடைபெறவிருக்கிறது. தோ்வு காலத்தில் மாணவா்கள் வாழ்விடத்தில் இருந்து தோ்வு மையங்களுக்கு தோ்வு நுழைவுச்சீட்டை காட்டி ஜூன் 19-ஆம் தேதிவரை இலவசமாக பயணிக்கலாம். தோ்வு எழுதும் மாணவா்களுக்கு நடத்துநா்கள் அல்லது ஓட்டுநா்கள் எவ்வித தொந்தரவும் செய்யக் கூடாது என்று கா்நாடகமாநில சாலை போக்குவரத்துக் கழகம் மற்றும் பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகம் தனித்தனியே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

SCROLL FOR NEXT