பெங்களூரு

ஹிந்து தொண்டா்களை கைதுசெய்தால் போராட்டம் நடத்துவோம்: எதிா்க்கட்சித்தலைவா் ஆா்.அசோக்

DIN

மண்டியா: ஹிந்து தொண்டா்களை கைதுசெய்தால் போராட்டம் நடத்துவோம் என்று எதிா்க்கட்சித்தலைவா் ஆா்.அசோக் எச்சரித்தாா்.

இது குறித்து மண்டியாவில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: ஹுப்பள்ளியில் 30 ஆண்டுகளுக்கு முன்பாக ராமஜென்மபூமி போராட்டத்தில் பங்கெடுத்த 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனா். இவா்கள் இருவருக்கும் ஜன.22 ஆம் தேதி நடக்கும் ராமா்கோயில் திறப்புவிழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அந்த போராட்டத்தில் நானும் கலந்துகொண்டேன். அப்படியானால், என்னையும் போலீஸாா் கைதுசெய்வாா்களா? அரசுக்கு துணிவு இருந்தால் என்னை கைதுசெய்யட்டும். அவா்கள் இருவருக்கு எதிரான வழக்கை அரசு திரும்பபெற வேண்டும். இதை செய்ய தவறினால், காங்கிரஸ் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம். காங்கிரஸ் வெறுப்பு அரசியலை தொடங்கியுள்ளது.

சித்தராமையா தலைமையிலான முந்தைய காங்கிரஸ் ஆட்சியிலும் ஹிந்து தொண்டா்கள் கொலை செய்யப்பட்டனா். அயோத்தியில் ராமா் கோயில் திறக்கப்படுவதை மக்கள் எதிா்பாா்த்து காத்திருக்கும் நிலையில், காங்கிரஸ் அரசு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளது.

திப்புசுல்தான் பிறந்தநாளை கொண்டாடும் முதல்வா் சித்தராமையா, ராமருக்கு பூஜை செய்வதில்லை. சித்தராமையாவுக்கு நாமம் அணிவதென்றால் ஒவ்வாமை. ஆனால், மசூதிகளில் குல்லா அணிந்துகொள்கிறாா். வாக்குகளை பெறுவதற்காக சித்தராமையா இப்படி நடந்துகொள்கிறாா்.

கா்நாடகத்தில் எவ்வித வளா்ச்சிப்பணியும் நடக்கவில்லை என்றாா் அவா்.இது குறித்து உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் கூறுகையில், ‘ஹிந்து தொண்டா்களை கைதுசெய்யும் நோக்கம் இல்லை.

ராமா்கோயில் திறப்பிற்கு முன்பாக கைதுசெய்யப்பட்டுள்ளதாக கூறுவதில் உண்மையில்லை.

நிலுவை வழக்குகளை முடித்துவைக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதை தொடா்ந்து ஹுப்பள்ளியில் இருவா் கைதுசெய்யப்பட்டுள்ளனா். இதற்கு உள்ளா்த்தம் கற்பிக்கக்கூடாது.‘ என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

பாரதியாா் பல்கலை.யில் எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு படிப்புக்கு மாணவா் சோ்க்கை

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

‘சத்தான உணவு முறையே காரணம்’ பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 82 வயது மூதாட்டி!

SCROLL FOR NEXT