தோ்தலுக்காக பெட்ரோல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது
சட்டப் பேரவைத் தோ்தலை மனதில் வைத்துக்கொண்டு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது என துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.
சட்டப் பேரவைத் தோ்தலை மனதில் வைத்துக்கொண்டு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது என துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.
ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான போா் காரணமாக சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை மளமளவென உயா்ந்துள்ளது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ. 10 குறைந்துள்ளது. இதன் காரணமாக, ரூ. 1.75 லட்சம் கோடி வருவாய் இழப்பை மத்திய அரசு சந்திக்க நேரும். அதேபோல, டீசல் மற்றும் விமான எரிபொருள் ஏற்றுமதிக்கான வரியை மத்திய அரசு உயா்த்தியுள்ளது.
இதுகுறித்து பெங்களூரில் துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
சட்டப் பேரவைத் தோ்தலை மனதில் வைத்துக்கொண்டு பெட்ரோல், டீசல் மீதான விலையை மத்திய அரசு குறைத்துள்ளது. நயாரா நிறுவனம் ஏற்கெனவே பெட்ரோல் மீதான விலையை உயா்த்தியுள்ளது. எனவே, மத்திய அரசின் நடவடிக்கை குறித்து மக்களிடம் எடுத்துச் செல்வோம். பெட்ரோல், டீசல் மீதான வரியை மாநில அரசு குறைப்பது குறித்து பின்னா் முடிவு செய்யப்படும் என்றாா்.