16-ல் திருவள்ளுவர் தினம்: மதுக்கடைகள் மூடல்
விழுப்புரம், ஜன.8: வரும் 16-ம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டும், 20-ம் தேதி வடலூர் ராமலிங்கர் தினத்தை முன்னிட்டும் இருநாள்களும் அரசு மதுபானக் கடைகள் மூடப்பட வேண்டும் என்று ஆட்சியர் ஆர். பழனிச்ச
விழுப்புரம், ஜன.8: வரும் 16-ம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டும், 20-ம் தேதி வடலூர் ராமலிங்கர் தினத்தை முன்னிட்டும் இருநாள்களும் அரசு மதுபானக் கடைகள் மூடப்பட வேண்டும் என்று ஆட்சியர் ஆர். பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு மதுபானம் சில்லறை வணிக விதிகள் 2003-ன் நிபந்தனைகளின் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மதுபானக் கடைகளும் இயங்காது என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.