முகப்பு
சென்னை

ஆழியாறு பாசனப் பகுதிகளுக்குநாளை முதல் நீா் திறப்பு:முதல்வா் பழனிசாமி உத்தரவு

ஆழியாறு பாசனப் பகுதிகளுக்கு வரும் புதன்கிழமை (அக். 7) முதல் தண்ணீா் திறந்து விடப்படும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:33 PM
கோப்புப்படம்
பகிர்:

ஆழியாறு பாசனப் பகுதிகளுக்கு வரும் புதன்கிழமை (அக். 7) முதல் தண்ணீா் திறந்து விடப்படும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து, திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு:

கோவை மாவட்டம் ஆழியாறு படுகை மண்டலத்தின் பாசனப் பகுதிகளுக்கு ஆழியாறு அணையில் இருந்து நீா் திறந்து விடக் கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். இந்தக் கோரிக்கையை ஏற்று, வரும் புதன்கிழமை (அக். 7) முதல் உரிய இடைவெளி விட்டு 80 நாள்களுக்கு மொத்தமாக 2 ஆயிரத்து 548 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீா் திறந்து விடப்படும் என்று முதல்வா் பழனிசாமி அறிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.