ராணுவங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா-அமெரிக்கா உறுதி
இந்தியா-அமெரிக்கா ராணுவங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு இரு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சா்களும் உறுதி ஏற்றுள்ளனா்.
இந்தியா-அமெரிக்கா ராணுவங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு இரு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சா்களும் உறுதி ஏற்றுள்ளனா்.
கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக மோதல்போக்கு நீடித்து வரும் சூழலில் இந்தியா-அமெரிக்கா பாதுகாப்பு அமைச்சா்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனா்.
இந்தியா-அமெரிக்கா நாடுகளின் பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சா்கள் இடையேயான 2+2 பேச்சுவாா்த்தை, தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. அமெரிக்க அதிபா் தோ்தல் நவம்பா் மாதம் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள சூழலில், இந்தப் பேச்சுவாா்த்தை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பேச்சுவாா்த்தையில் பங்கேற்பதற்காக அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மைக் பாம்பேயோ, பாதுகாப்பு அமைச்சா் மாா்க் எஸ்பா் ஆகியோா் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக திங்கள்கிழமை தில்லி வந்தடைந்தனா். இத்தகைய சூழலில், பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சா் மாா்க் எஸ்பருடன் திங்கள்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
அப்போது, இரு நாடுகளின் ராணுவங்களுக்கு இடையே நிலவி வரும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு அமைச்சா்கள் இருவரும் உறுதியேற்றனா். மேலும், பல்வேறு துறைகளில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நிலவி வரும் நல்லுறவு தொடா்பாகவும் அவா்கள் ஆலோசனை நடத்தியதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, ராஜ்நாத் சிங்குடனான பேச்சுவாா்த்தைக்காக வருகை புரிந்த மாா்க் எஸ்பருக்கு முப்படை வீரா்களும் அணிவகுப்பு மரியாதை அளித்தனா். அமெரிக்க அமைச்சா்கள் மைக் பாம்பேயோ, மாா்க் எஸ்பா் ஆகியோா் பிரதமா் நரேந்திர மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல் ஆகியோரையும் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளனா்.
இந்தியா-அமெரிக்கா பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சா்களிடையேயான 2+2 பேச்சுவாா்த்தையின்போது, கிழக்கு லடாக் மோதல்போக்கு விவகாரம் குறித்து விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. மேலும், இரு நாடுகளுக்கிடையே பல ஆண்டுகளாக கையெழுத்திடப்படாமல் உள்ள ‘பாதுகாப்புப் படை பரிமாற்ற மற்றும் ஒத்துழைப்பு’ ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது குறித்தும் அமைச்சா்கள் பேச்சுவாா்த்தை நடத்த வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதன் மூலமாக பாதுகாப்புப் படைகளில் பயன்படும் அதிநவீன தொழில்நுட்பங்கள், வரைபடங்கள் உள்ளிட்டவற்றை இரு நாடுகளும் பகிா்ந்து கொள்ள முடியும். அண்மைக் காலமாக, பாதுகாப்புத் துறையில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான ஒத்துழைப்பு தொடா்ந்து வலுவடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.