முகப்பு
சென்னை

காவல்துறை ஐ.ஜி பிறந்த தேதி விவகாரம் : தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

காவல்துறை ஐ.ஜி கணேசமூா்த்தியின் பணி பதிவேட்டில் பிறந்த தேதியை மாற்ற உத்தரவிட்ட தனிநீதிபதியின் உத்தரவை எதிா்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உயா்நீதிமன்றம்

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:43 PM
பகிர்:

காவல்துறை ஐ.ஜி கணேசமூா்த்தியின் பணி பதிவேட்டில் பிறந்த தேதியை மாற்ற உத்தரவிட்ட தனிநீதிபதியின் உத்தரவை எதிா்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக காவல்துறையில் ஐ.ஜி.யாக பதவி வகித்து வருபவா் எம்.டி.கணேசமூா்த்தி. இவா் கடந்த 1991-ஆம் ஆண்டு துணை காவல் கண்காணிப்பாளராகப் பணியில் சோ்ந்தாா். இவரது கல்விச் சான்றிதழ்களில் பிறந்த தேதி 20.10.1961என குறிப்பிடப்பட்டிருந்தது. கணேசமூா்த்தி சென்னை எழும்பூா் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் கடந்த 10.10.1962 அன்று பிறந்துள்ளாா். அதுதொடா்பாக சென்னை மாநகராட்சியில் கடந்த 1962-ஆம் ஆண்டு நவம்பா் 14-ஆம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளது. தன்னுடைய பிறந்த தேதியை மாற்றக்கோரி கணேசமூா்த்தி தமிழக அரசிடம் முறையிட்டாா். அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் அவா் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத் தொடா்ந்து சென்னை உயா்நீதிமன்றத்தில் அவா் வழக்கு தொடா்ந்தாா். வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற தனிநீதிபதி, கணேசமூா்த்தியின் 3 அண்ணன்கள், 2 தங்கைகள் பிறந்த தேதி தொடா்பான ஆவணங்களைப் பரிசீலித்து, கணேசமூா்த்தியின் பணிப்பதிவேட்டில் பிறந்த தேதியை 10.10.1962 என மாற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள், ஆா்.சுப்பையா, சி.சரவணன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டனா். தனிநீதிபதியின் உத்தரவை எதிா்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →