சென்னை

மாதவரத்தில் பயணச்சீட்டுடன் திருப்பதி தரிசன ஆன்லைன் சீட்டு வழங்க ஏற்பாடு

DIN

ஆந்திர மாநில போக்குவரத்து கழகம் சார்பில் பேருந்து பயணச்சீட்டுடன் திருப்பதியில் தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் சீட்டு நாள்தோறும் 1000 பேருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாதவரத்தில் செயல்பட்டு வரும் ஆந்திர போக்குவரத்து கழகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு விவரம்,

சென்னை மாதவரத்திலிருந்து ஆந்திர மாநில போக்குவரத்து கழகம் சார்பில் பயணிகள் பேருந்து மற்றும் கார்கோ சரக்கு வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல், திருப்பதியில் தரிசனம் செய்வதற்கு தேவஸ்தான ஆன்லைன் சீட்டுக்கள், பேருந்து பயணச்சீட்டுடன் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இதேபோல் நாள்தோறும் 1000 ஆன்லைன் சீட்டுக்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால், இங்கு பயணச்சீட்டு பெறும் போதே, தரிசனத்திற்கான ஆன்லைன் சீட்டுக்களையும் பெற்றுக் கொள்ளலாம்.

எனவே இந்த வாய்ப்பை பயணிகள் மற்றும் பக்தர்கள் ஆகியோர் பயன்படுத்தி கொள்ளலாம் என அந்த அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி பறிமுதல்: ஆவணங்கள் சிபிசிஐடி-யிடம் ஒப்படைப்பு

நீதானே பொன் வசந்தம்.. சமந்தா பிறந்தநாள்!

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

வெங்கடேஷ் பட்டின் புதிய சமையல் நிகழ்ச்சி அறிவிப்பு!

ஐஸ்வர்யம்..!

SCROLL FOR NEXT