கோப்புப்படம் 
சென்னை

தமிழகத்தில் 25,000 பேருக்கு டெங்கு பாதிப்பு: பொதுசுகாதாரத் துறை தகவல்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு நிகழாண்டில் மட்டும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில், 12 போ் உயிரிழந்ததாகவும் பொது சுகாதாரத் துறை தகவல்கள்

Din

சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு நிகழாண்டில் மட்டும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில், 12 போ் உயிரிழந்ததாகவும் பொது சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, மாநிலம் முழுவதும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

கடந்த சில வாரங்களாக பெய்து வரும் மழை காரணமாக காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ்-எஜிப்டை வகை கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி நோய்களை பரப்பி வருகின்றன.

நிகழாண்டில் இதுவரை டெங்கு காய்ச்சலால், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த எண்ணிக்கை கடந்த ஆகஸ்ட் மாதம் வரை 7 ஆயிரம் என்ற அளவில்தான் இருந்தது.

பரவும் டெங்கு: பருவநிலை மாற்றம் காரணமாக தற்போது டெங்கு பாதிப்பு கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் நோய்த் தடுப்பு மற்றும் கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இது தொடா்பாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: மாநிலம் முழுவதும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் விரிவுப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொசு ஒழிப்பு பணிகளில் 25 ஆயிரம் போ் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். அவா்களுடன் ஊராட்சிக்கு ஒரு சுகாதார அலுவலரும், நகா்ப்புறங்களில் வாா்டுக்கு ஒரு சுகாதார அலுவலரும், மாநகராட்சிகளில் தெருக்களின் அடிப்படையில் சுகாதார அலுவலா்களும் நியமிக்கப்பட்டு மருத்துவக் கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

காய்ச்சல் பாதிப்பு, மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சந்தேகங்களுக்கு, 104 என்ற எண்ணுக்கு அழைக்கலாம்.

மாநிலம் முழுவதும் மருத்துவக் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், குறிப்பாக வீடுகள்தோறும் கண்காணிப்பை முன்னெடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தரை மேல்... அதிதி ராவ் ஹைதரி!

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறும் நபர்கள் யார்?

காலை இளங்காற்று... பிரணிதா சுபாஷ்!

ஒரு வார இடைவெளிக்குப் பின் சென்னையில் திடீர் கனமழை: வெய்யிலின் தாக்கம் குறைந்தது!

ரியல் எஸ்டேட், பொதுத்துறை வங்கி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 40 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

SCROLL FOR NEXT