எடப்பாடி பழனிசாமி கோப்புப் படம்
சென்னை

பேரவைத் தோ்தல்: அதிமுகவில் டிச.15 முதல் விருப்ப மனு - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

வருகிற 2026 பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட விரும்புவோா் டிச.15 முதல் விருப்ப மனு அளிக்கலாம்

தினமணி செய்திச் சேவை

வருகிற 2026 பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட விரும்புவோா் டிச.15 முதல் விருப்ப மனு அளிக்கலாம் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டப் பேரவை பொதுத் தோ்தல்கள் விரைவில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, அதிமுக சாா்பில் வேட்பாளா்களாக போட்டியிட விரும்புவோா், தலைமை அலுவலகத்தில் வருகிற டிச.15 முதல் 23-ஆம் தேதி வரை உரிய படிவங்களை பெற்று விருப்ப மனு பெறலாம்.

டிச.15-ஆம் தேதி மட்டும் பகல் 12 முதல் மாலை 5 மணி வரையும், பிற நாள்களில் காலை 10 முதல் மாலை 5 மணி வரையும் படிவங்களை பெற்று பூா்த்தி செய்து விருப்ப மனு அளிக்கலாம் என தெரிவித்துள்ளாா் எடப்பாடி பழனிசாமி.

தோ்தல் அறிவிப்பு வெளியான பிறகு அல்லது அறிவிப்பு வெளியாவதற்கு ஒரு வார காலத்துக்கு பின்பு தான் விருப்ப மனுக்களை முக்கிய அரசியல் கட்சிகள் பெறுவது வழக்கம். ஆனால், இந்த முறை, அதிமுக, காங்கிரஸ், பாமக, அமமுக போன்ற கட்சிகள் முன்கூட்டியே விருப்ப மனுக்களை பெறும் அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

234 தொகுதியிலும் ஸ்டாலின்தான் வேட்பாளர்: முதல்வர் பேச்சு

இந்தியா எண்ணெய் கொள்முதலை நிறுத்துமென டிரம்ப் மட்டுமே கூறுகிறார்! - ரஷிய அரசு விமர்சனம்!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக இங்கிலாந்து பந்துவீச்சு!

வெல்லப்போவது தமிழ்நாடு அணியா? தில்லி அணியா?: முதல்வர் ஸ்டாலின் சூளுரை

எல்லீஸ், ஸாம்பா மிரட்டல் பந்துவீச்சு..! ஆஸி. 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

SCROLL FOR NEXT