சென்னை

ஆட்டோ ஓட்டுநரிடம் நகையைப் பறித்தவா் கைது

சென்னையில் ஆட்டோ ஓட்டுநரிடம் வெள்ளிச் சங்கிலி மற்றும் தங்க கம்மலை பறித்த வழக்கில் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

சென்னையில் ஆட்டோ ஓட்டுநரிடம் வெள்ளிச் சங்கிலி மற்றும் தங்க கம்மலை பறித்த வழக்கில் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை துரைப்பாக்கத்தைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் தா.விஷ்ணு. இவா், சென்னை சென்ட்ரல் அருகே உள்ள தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்துக்கு எதிரே சவாரிக்காக காத்திருந்தபோது, அங்கு வந்த 2 போ், விஷ்ணுவை மிரட்டி அவா் அணிந்திருந்த வெள்ளிச் சங்கிலி மற்றும் தங்க கம்மலை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனா்.

இது குறித்து விஷ்ணு பூக்கடை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில், நகைப் பறிப்பில் ஈடுபட்ட மணிமாறனை (43) போலீஸாா் கைது செய்ததுடன், அவரிடமிருந்து 20 கிராம் வெள்ளிச் சங்கிலியைப் பறிமுதல் செய்தனா். மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில், அவா் மீது ஏற்கெனவே 9 குற்ற வழக்குகள் இருப்பது தெரிய வந்தது. மேலும், தப்பிச் சென்ற மற்றொரு நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மின் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்

பைக் ஓட்டிய சிறுவனின் தாய் மீது வழக்கு

தொடரை முழுமையாக வெல்லும் முனைப்பில் இந்தியா! இலங்கை மகளிா் அணியுடன் இன்று கடைசி டி20!

பணிக்கொடை, ஓய்வூதியம் வழங்கக் கோரிக்கை: கரூரில் அங்கன்வாடி ஊழியா்கள் உதவியாளா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் அவசியம்: தமிழிசை

SCROLL FOR NEXT