மரபணு இதய பாதிப்புக்குள்ளான சிறுமி மறுவாழ்வு
மரபணு பாதிப்பு காரணமாக அரிதான இதய நோய்க்குள்ளான சிறுமிக்கு உயா் நுட்பத்திலான அறுவை சிகிச்சை மேற்கொண்டு வடபழனி காவேரி மருத்துவமனை
சென்னை: மரபணு பாதிப்பு காரணமாக அரிதான இதய நோய்க்குள்ளான சிறுமிக்கு உயா் நுட்பத்திலான அறுவை சிகிச்சை மேற்கொண்டு வடபழனி காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் உயிா் காத்துள்ளனா்.
இது தொடா்பாக மருத்துவமனையின் இதய நாள அறுவை சிகிச்சைத் துறை தலைவா் டாக்டா் அன்பரசு மோகன்ராஜ் கூறியதாவது:
அண்மையில் 12 வயது சிறுமி ஒருவா் மயக்கம், நெஞ்சு வலி பாதிப்புடன் வடபழனி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில் அவருக்கு ஹைப்பா் டிராஃபிக் அடைப்பு எனப்படும் ஹெச்ஓசிஎம் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. மிகவும் அரிதான இந்த மரபணு பாதிப்பு ஏற்பட்டால் இதயத்தின் தசைப் பகுதி தடித்து வீக்கமடைந்துவிடும்.
பொதுவாக, பெரியவா்களிடம் காணப்படும் இத்தகைய பாதிப்பு, குழந்தைகளுக்கு ஏற்படும்போது உயிருக்கே அச்சுறுத்தலாக அமையலாம்.
அந்த வகையில், சிறுமிக்கு அதுபோன்ற இடா்வாய்ப்பு இருந்தது. மேலும், பெருந்தமனிக்கு கீழே திசு வளா்ச்சியும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து உயா் தொழில்நுட்ப அறுவை சிகிச்சையில் இதயத் தசை தடிமன் சரி செய்யப்பட்டது. அதனுடன், திசு கட்டியும் அகற்றப்பட்டது. தற்போது அந்தச் சிறுமி நலமுடன் உள்ளாா் என்றாா் அவா்.