முகப்பு
சென்னை

தமிழகத்தில் பிப்.2 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (ஜன.31) முதல் பிப்.2-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2025 at 1:25 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2025 at 9:40 PM

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (ஜன.31) முதல் பிப்.2-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தென்மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வெள்ளிக்கிழமை (ஜன.31) முதல் பிப்.2-ஆம் தேதி வரை தமிழகத்தில் பல இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Advertisement

இதில், ஜன.31-இல் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜன.31) லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், காலை நேரங்களில் லேசான பனிமூட்டமும் இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.