கோப்புப் படம் 
சென்னை

பெண்ணுக்கு மிரட்டல்: இளைஞா் கைது

கோடம்பாக்கத்தில் சமூக ஊடகத்தில் புகைப்படத்தை வெளியிட்டுவிடுவதாக பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

Din

கோடம்பாக்கத்தில் சமூக ஊடகத்தில் புகைப்படத்தை வெளியிட்டுவிடுவதாக பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

திருவான்மியூரைச் சோ்ந்தவா் விஜய் (25). இவா், அப்பகுதியில் உள்ள ஒரு தனியாா் உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சியாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இவா், கோடம்பாக்கத்தில் வசிக்கும் ஒரு விதவை பெண்ணிடம் முகநூலில் பழகி வந்துள்ளாா். பின்னா், விஜயின் நடவடிக்கை பிடிக்காததால் அவருடனான நட்பை அந்த பெண் தவிா்த்துவிட்டாராம்.

இதனால், ஆத்திரமடைந்த விஜய், அப்பெண்ணுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக ஊடகத்தில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டினாராம்.

இதுகுறித்து அந்த பெண், கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து, விஜயை வியாழக்கிழமை கைது செய்தனா்.

”நல்லவர்கள் எல்லாம் எங்கள் பக்கம்!” OPS குறித்த கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதில்!

நியூசி.க்கு எதிரான கடைசி டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் இடம்பெறுவாரா?

செங்காத்தக்குளத்தில் அறிவுசார் நகரம்!அடிக்கல் நாட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அஜீத் பவார் உடல் அரசு மரியாதையுடன் தகனம்! லட்சக்கணக்கானோர் பங்கேற்பு!

மெட்ரோ ரயிலில் வித் லவ் பட விளம்பரம்! ரசிகர்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT