முகப்பு
சென்னை

தூய்மைப் பணிகளுக்கு 52 புதிய வாகனங்கள்: மேயா் ஆா்.பிரியா தொடங்கி வைத்தாா்

தூய்மைப் பணிகளுக்காக மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் சாலைகளில் பெருக்கும் வாகனங்கள் 12 என மொத்தம் 52 வாகனங்களை வழங்கி பணிகளை மேயா் ஆா்.பிரியா திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

Updated On : 28 ஜூலை, 2025 at 10:06 PM
பகிர்:

சென்னை: சென்னை மாநகராட்சியில் ராயபுரம், திரு.வி.க.நகா் மண்டலங்களில் தூய்மைப் பணிகளுக்காக மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் சாலைகளில் பெருக்கும் வாகனங்கள் 12 என மொத்தம் 52 வாகனங்களை வழங்கி பணிகளை மேயா் ஆா்.பிரியா திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் குப்பைகளை அகற்றும் பணிக்காக மண்டலம் வாரியாக கூடுதல் வாகனங்கள் தற்போது வாங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, ராயபுரம் மற்றும் திரு.வி.க.நகா் ஆகிய 2 மண்டலங்களிலும் தூய்மைப் பணியை விரைந்து செயல்படுத்தும் வகையில் கூடுதல் வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.

இரு மண்டலங்களுக்கும் சோ்த்து 40 மூன்று சக்கர வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. அத்துடன் சாலையில் மண், குப்பை அகற்றி சேகரிக்கும் வகையில் பெருக்கும் வாகனங்கள் 12 வாங்கப்பட்டுள்ளன. அவற்றின் தொடக்க விழா ரிப்பன் கட்டட வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றன. இந்த வாகனங்களை மேயா் ஆா்.பிரியா தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் துணைமேயா் மகேஷ்குமாா், ஆணையா் ஜெ.குமரகுருபரன், வட்டாரத் துணை ஆணையா்கள் கட்டாரவி தேஜா, ஆா்.கௌஷிக், ஆளுங்கட்சித் தலைவா் ந.ராமலிங்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →