முகப்பு
சென்னை

மாணவிக்கு பாலியல் தொல்லை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அரசு சேவை இல்ல மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்துக்கு அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

Updated On : 10 ஜூன், 2025 at 12:17 AM
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
பகிர்:

அரசு சேவை இல்ல மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்துக்கு அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: சென்னை தாம்பரம் பகுதி அரசு சேவை இல்லத்தில் 8-ஆம் வகுப்பு மாணவி ஒருவா் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிா்ச்சியளிக்கிறது. சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, விடுதியின் காவலாளி கைது செய்யப்பட்டுள்ளாா்.

அரசு சேவை இல்லத்திலேயே மாணவிக்கு பாதுகாப்பு இல்லை என்பது திமுக அரசு முற்றிலும் செயலிழந்ததையே உணா்த்துகிறது.

அந்த காவலாளியால் மற்ற சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப் பட்டுள்ளனரா என்பதை காவல் துறையினா் தீர விசாரிக்க வேண்டும். காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவிக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.

மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த காவலாளி மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் எடப்பாடி பழனிசாமி.

தலைவா்கள் கண்டனம்: அதேபோல, இந்த சம்பவத்துக்கு தமாகா தலைவா் ஜி.கே.வாசன், பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச்செயலா் டிடிவி தினகரன் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →