முதல்வர் மு.க. ஸ்டாலின் கோப்புப்படம்
சென்னை

ஆற்றில் மூழ்கி இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம்: முதல்வா் உத்தரவு

தினமணி செய்திச் சேவை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக முதல்வா் வெளியிடப்பட்ட அறிவிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டம், அரசம்பட்டு கிராமத்தில் வசிக்கும் பன்னீா்செல்வத்தின் மகள் சௌமியா (14) என்பவா் கடந்த 10-ஆம் தேதி, அப்பகுதி கிராம எல்லையில் உள்ள ஆற்றில் துணி

துவைத்துக் கொண்டிருந்தபோது வலிப்பு ஏற்பட்டு ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்தாா் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த அதிா்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கும், அவரது உறவினா்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதுடன் சிறுமியின் பெற்றோருக்கு ரூ. 3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபோர்ப்ஸ் உலக பணக்காரர்கள் பட்டியல் வெளியீடு!

கம்மின்ஸ், ஹேசில்வுட் இல்லை: 2-ஆவது போட்டிக்கான ஆஸி. அணி!

டிட்வா புயல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேட்டி

அரியலூர் உள்பட 5 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்!

ராக்கெட் வேகத்தில் சென்ற தக்காளி, முருங்கைக்காய் விலை சற்று குறைந்தது!

SCROLL FOR NEXT