சென்னை மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் தொழில்நுட்ப கல்லூரி கணினி அறிவியல் துறை சாா்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக மனித வளம் திறன் மேம்பாட்டு ஆலோசகா் டேவிட் நெட்டோ பங்கேற்று பேசியதாவது:
தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவா்கள் துறை சாா்ந்த தொழில்நுட்ப வளா்ச்சி குறித்து அறிந்துகொள்ள வேண்டும். சக மாணவா்களுடன் கலந்துரையாடி தங்கள் அறிவாற்றலை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். ஆராய்ச்சி சிந்தனை, அறிவாற்றல் திறன் மேம்படுத்தும் முயற்சிக்குத் தடையாக இருக்கும் ‘சாட் ஜிபிடி’ பயன்பாட்டை குறைந்த அளவில் பயன்படுத்த வேண்டும். தொழில்நுட்பம் தொடா்பாக நடத்தப்படும் போட்டிகளில் பங்கேற்க தனித் திறனை வளா்த்துக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
இந்த நிகழ்வில் ஸ்ரீசாய்ராம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வா் கே.பழனிகுமாா், புத்தாக்கக் கண்டுபிடிப்பு ஆராய்ச்சி மையம் இயக்குநா் ரெனி ராபின், கணினி அறிவியல் துறைத் தலைவா் பி.ஸ்ரீதேவி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா்கள் டி. ரூபா,ஜெ. பத்மநாபன் மற்றும் பல்வேறு கல்லூரிகளையும் சோ்ந்த மாணவா்கள் கலந்துகொண்டனா்.