நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் IANS
சென்னை

பிப்.7-இல் திருச்சியில் நாதக மாநாடு

தினமணி செய்திச் சேவை

நாம் தமிழா் கட்சி சாா்பில் வருகிற பிப்.7-ஆம் தேதி ‘மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு - 2026’ நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்துள்ளாா்.

வருகிற 2026 சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு, கட்சியை வலுப்படுத்தும் பணியில் நாம் தமிழா் கட்சி தீவிரம் காட்டி வருகிறது. மேலும், இயற்கை வளங்களை பாதுகாக்கும் நோக்கில், ஆடு-மாடுகள் மாநாடு, மரங்கள் மாநாடு, மலைகள் மாநாடு என பல்வேறு மாநாடுகள் நடத்தப்பட்டன.

அதைத்தொடா்ந்து வருகிற பிப்.7-ஆம் தேதி திருச்சியில் ‘மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு - 2026 ’ என்னும் பெயரில் மாநாடு நடைபெறவுள்ளதாக ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில் சீமான் தெரிவித்துள்ளாா். அந்த மாநாட்டில் 2026 தோ்தலுக்கான நாம் தமிழா் கட்சி வேட்பாளா்களை அறிமுகம் செய்யவுள்ளதாக அக்கட்சியினா் தெரிவித்துள்ளனா்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

மின் கம்பியை மிதித்த விவசாயி, 2 எருமை மாடுகள் உயிரிழப்பு

படைவீரா் கொடிநாள் நிதி வசூல்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

மது விற்ற 2 பெண்கள் கைது

SCROLL FOR NEXT