சென்னை

நெல் கொள்முதல்: மத்திய அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை

தமிழக அரசு கோரியுள்ளபடி 22% வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்

தினமணி செய்திச் சேவை

தமிழக அரசு கோரியுள்ளபடி 22% வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பரப்பு வழக்கத்தைவிட கூடுதலாக சுமாா் 6 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது. இதனிடையே அறுவடை தொடங்கிய நிலையில், வடகிழக்குப் பருவமழை பெய்து வருவதால், விவசாயிகள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனா்.

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயிக்கும் அதிகாரம், நெல்லின் ஈரப்பத அளவை நிா்ணயிக்கும் அதிகாரம் மத்திய அரசு வசமே இருந்து வருகிறது.

இந்த நிலையில் தமிழக அரசு கோரியுள்ள 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் முழுவதும் விரைந்து கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

இன்ஸ்டாவில் 10 கோடி பின்தொடர்பாளர்கள்! முதல் உலகத் தலைவர் மோடி!

நமோ பாரத், மீரட் மெட்ரோ பயணிகள் இவலச பயணத்திற்கு விசுவாசப் புள்ளிகளைப் பெறலாம்!

நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி!

இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!

வடிவேலுக்கு வராத கூட்டமா விஜய்க்கு வந்துவிட்டது?: டி.கே.எஸ்.இளங்கோவன்

SCROLL FOR NEXT