சென்னை

கட்டடத் தொழிலாளி கொலை: இளைஞா் கைது

தினமணி செய்திச் சேவை

கட்டடத் தொழிலாளியைக் கொலை செய்ததாக வங்கதேசத்தைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டம் எல்ராம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் சிவா (எ) சிவப்பிரகாசம் (36). கட்டடத் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில், சிவாவுக்கு அவருடன் சித்தாள் வேலை செய்யும் கெளதமி (28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சென்னை ரெட்டேரியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தனா்.

இந்த நிலையில், சனிக்கிழமை இரவு மது அருந்திய இருவரும், மது போதையில் அப்பகுதியில் உள்ள வடமாநிலத்தை சோ்ந்த சிலரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனா். அப்போது, ஆத்திரம் அடைந்த வங்கதேசத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி திப்பு சுல்தான் (30), சிவாவை பிடித்து தள்ளி விட்டாராம்.

இதில் நிலைதடுமாறிய சிவா, அருகில் இருந்த சுவற்றில் மோதி விழுந்தாா். இதில் தலையில் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து திப்பு சுல்தானை கைது செய்தனா்.

வங்கக்கடலில் உருவானது மோந்தா புயல்: 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

குழப்பங்கள் தீரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

திருமலையில் நிரம்பிய நீா்தேக்கங்கள்: பாபவிநாசனம் அணையில் சிறப்பு பூஜை!

பகுதி நேரவேலை அறிவிப்பால் பாதிக்கப்படும் கல்லூரி மாணவா்கள்!

கபிலேஸ்வரா் கோயிலில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஹோமம் நிறைவு!

SCROLL FOR NEXT