‘மோந்தா’ புயல்: சென்னையில் கனமழை எப்போது தொடங்கும்? தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை!
அக். 28-இல் உருவாகவுள்ள ‘மோந்தா’ புயல்...
‘மோந்தா’ புயல் அக். 28-இல் உருவாகவுள்ள நிலையில், சென்னையில் கனமழை எப்போது? என்ற தகவலை தமிழ்நாட்டைச் சேர்ந்த வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜாண்(தமிழ்நாடு வெதர்மேன்) வெளியிட்டுள்ளார்.
அதன்படி, சென்னையில் நாளை காலையிலிருந்து மழை தொடரும் என்று தமிழ்நாடு வெதர்மேன் எச்சரித்துள்ளார். மேகக் கூட்டம் வங்கக் கடலிலிருந்து சென்னையை நோக்கி நகர்ந்து வருவதைச் சுட்டிக்காட்டி அவர் இந்தத் தகவலைப் பதிவிட்டுள்ளார்.
summary