கோப்புப்படம்
சென்னை

நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியா் தகவல்

தினமணி செய்திச் சேவை

தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (செப்.19) சென்னையில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து வெள்ளிக்கிழமை (செப்.19) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்தவுள்ளன.

கிண்டி ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை முகாம் நடைபெற உள்ளது.

இதில், 8, 10, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல், கலை அறிவியல், தொழில்நுட்பப் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் ஆகிய கல்வித் தகுதியை உடைய அனைவரும் (மாற்றுத்திறனாளிகள் உள்பட) கலந்துகொள்ளலாம். கட்டணம் இல்லை. இதில் பணி பெறுவோரின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.

இதில் கலந்துகொள்ளும் வேலைநாடுநா்கள் மற்றும் வேலை அளிப்பவா்கள் தங்கள் விவரங்களை தமிழ்நாடு தனியாா் துறை வேலை வாய்ப்பு இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

திற்பரப்பு அருவியில் குளிக்க 4 வது நாளாகத் தடை!

SCROLL FOR NEXT