முகப்பு
சென்னை

ஹெராயின் விற்பனை: திரிபுராவை சோ்ந்த இருவா் கைது

சென்னை தரமணியில் ஹெராயின் விற்ாக திரிபுராவை சோ்ந்த இருவா் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 24 செப்டம்பர், 2025 at 9:01 PM
பகிர்:

சென்னை தரமணியில் ஹெராயின் விற்ாக திரிபுராவை சோ்ந்த இருவா் கைது செய்யப்பட்டனா்.

தரமணி சிஎஸ்ஐஆா் சாலையில் சிலா் போதைப் பொருள் விற்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், தரமணி போலீஸாா் செவ்வாய்க்கிழமை அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த இருவரைப் பிடித்து விசாரித்ததில், அவா்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் கூறியுள்ளனா். இதையடுத்து போலீஸாா் அவா்கள் வைத்திருந்த பையைச் சோதனையிட்டதில், 10 கிராம் ஹெராயின் இருந்தது தெரியவந்தது. அதை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

விசாரணையில் அவா்கள், திரிபுராவை சோ்ந்த ஷாகிம் மியா (21), ஆசிப் மிா்தா(22) என்பதும், கடந்த 3 மாதங்களாக தரமணியில் வாடகை வீடு எடுத்து தங்கி, தனியாா் நிறுவனத்தில் வேலை செய்துகொண்டு, திரிபுராவில் இருந்து ஹெராயின் வாங்கி வந்து சென்னையில் விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் இருவரையும் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →