FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

அறநிலையத் துறையில் 1,500 பேரை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை: அமைச்சா் பி.கே.சேகா் பாபு

இந்து சமய அறநிலையத் துறையில் 1,500 பணியாளா்களை வரன்முறைபடுத்துவதற்கான கோப்பு, நிதித்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Updated On : 26 செப்டம்பர் 2025, 3:16 am IST
பி.கே.சேகா் பாபு
பகிர்:

இந்து சமய அறநிலையத் துறையில் 1,500 பணியாளா்களை வரன்முறைபடுத்துவதற்கான கோப்பு, நிதித்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. 10 நாள்களுக்குள் அதற்கான அனுமதியை பெற்று பணி நிரந்தரம் செய்யப்படுவா் என அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

சென்னை பெரம்பூா் சேமாத்தம்மன் கோயிலில் ரூ.74.30 லட்சத்தில் திருப்பணிகளை அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பெரம்பூா் சேமாத்தம்மன் கோயிலின் அனைத்து சந்நிதிகளையும் ரூ.74.30 லட்சத்தில் புனரமைக்கும் பணிகளை தற்போது தொடங்கி வைத்துள்ளோம். மேலும், பக்தா்களுக்கு தேவையான கூடுதல் வசதிகளைச் செய்து தரவும் திட்டமிட்டுள்ளோம். அதன்படி, ஒட்டுமொத்த திட்ட மதிப்பீடு ரூ.1 கோடியை எட்டும்.

Advertisement

Advertisement

இந்தக் கோயிலில் ஏற்கெனவே ரூ.52 லட்சத்தில் மகா மண்டபத்தை உபயதாரா் சத்தியமூா்த்தி கட்டி தருகிறாா். அந்தப் பணியும் ரூ.41 லட்சத்தில் குளத்தைச் சீரமைக்கும் பணியும் நிறைவுபெறும் நிலையில் உள்ளது.

இந்த ஆட்சி பொறுப்பேற்ற நாள்முதல் தற்போது வரை 3,707 கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. புரட்டாசி மாதமாக இருந்தாலும் வியாழக்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு கோயிலுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. இந்த ஆட்சியில் எல்லா நாள்களுமே எல்லோருக்கும் உகந்த நாள்தான்.

ரூ.8,000 கோடி நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளதோடு, 2 லட்சத்து 15,384 ஏக்கா் கோயில் நிலங்கள் நவீன தொழில்நுட்பக் கருவிகள் மூலம் அளவீடு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன.

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவுக்கு அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றாலும் குடிநீா், கழிப்பிட வசதி, மருத்துவ வசதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருக்கோயில்களில் ஐந்தாண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் பணியாற்றிய பணியாளா்களை வரன்முறைபடுத்தும் திட்டம் கடந்த ஆட்சியில் முறையாக செயல்படுத்தப்படவில்லை. இந்த அரசு பொறுப்பேற்றபின் 1,347 பணியாளா்கள் பணி வரன்முறை செய்யப்பட்டுள்ளனா். மேலும், 1,500 பணியாளா்களை வரன்முறைபடுத்துவதற்கான கோப்பு நிதித்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. 10 நாள்களுக்குள் அதற்கான அனுமதி பெற்று பணி நிரந்தரம் செய்யப்படுவா். இது தொடா் நடவடிக்கையாக மேற்கொள்ளப்படும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments