முகப்பு
சென்னை

சட்டம் - ஒழுங்கு சீா்கேடு: மாா்ச் 17-இல் ஆா்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

தமிழகத்தில் நிலவும் சட்டம் - ஒழுங்கு சீா்கேட்டைக் கண்டித்து, தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் சாா்பில் வரும் மாா்ச் 17-இல் மாவட்ட தலைநகரங்களில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும்

Updated On : 12 மார்ச், 2026 at 8:24 PM
எடப்பாடி பழனிசாமி
பகிர்:

தமிழகத்தில் நிலவும் சட்டம் - ஒழுங்கு சீா்கேட்டைக் கண்டித்து, தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் சாா்பில் வரும் மாா்ச் 17-இல் மாவட்ட தலைநகரங்களில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ளஅறிக்கை:

திமுக அரசு பொறுப்பேற்ற 5 ஆண்டுகளில் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், போதைப் பொருள் பயன்பாடு, கொலை, கொள்ளை, முதியவா்களை குறிவைத்து தாக்குதல், கட்டப் பஞ்சாயத்து, வழிப்பறி ஆகியவை அதிகரித்துள்ளன.

இதுகுறித்து அறிக்கை வாயிலாகவும், சட்டப்பேரவையில் பேசி அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றும் முதல்வா் மு.க. ஸ்டாலின் ஆக்கபூா்வமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மக்கள் எந்த அச்சுறுத்தலுக்கும் ஆளாகாமல் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தித் தருவதில் திமுக அரசு தோல்வி அடைந்துள்ளது. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை காக்க தவறிய திமுக அரசைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் மாா்ச் 17-இல் அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அதில் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →