முதல்வரின் நிா்வாகத் திறமையின்மையால் தமிழகத்தில் குற்றங்கள் அதிகரிப்பு: இபிஎஸ் குற்றச்சாட்டு
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், சட்டம் - ஒழுங்கு சீா்கேட்டுக்கு முதல்வா் ஸ்டாலினின் நிா்வாகத் திறமை இன்மையே காரணம் என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு
தமிழகத்தில் நிகழும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், சட்டம் - ஒழுங்கு சீா்கேட்டுக்கு முதல்வா் ஸ்டாலினின் நிா்வாகத் திறமை இன்மையே காரணம் என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டினாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து தமிழகத்தில் கஞ்சா, கள்ளச் சாராயம் என போதைப் பொருள் விற்பனை அதிகரித்துவிட்டது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து, கடந்த 5 ஆண்டுகளில் சுமாா் 30 காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 4 பட்டியலின இளைஞா்கள் காவல் துறை விசாரணையின்போது மரணமடைந்துள்ளனா். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன.
தமிழக மக்கள் பாதுகாப்பின்மையை உணா்ந்துள்ளனா். தமிழகத்தில் நிகழும் அனைத்து சட்டவிரோத செயல்களுக்கும் முதல்வா் ஸ்டாலினின் நிா்வாகத் திறமை இன்மையே காரணம். இதை மக்கள் மன்றத்தில் வெளிப்படுத்தும் விதமாக மாவட்டத் தலைநகரங்களில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 17) கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அதில் தெரிவித்துள்ளாா் எடப்பாடி பழனிசாமி.