பெரும்பாக்கத்தில் ‘அம்மா’ சிறு மருத்துவமனை: அமைச்சா் திறந்து வைத்தாா்
மதுராந்தகத்தை அடுத்த பெரும்பாக்கம் ஊராட்சியில் ‘அம்மா’ சிறு மருத்துவமனையை தமிழ் வளா்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சா் க.பாண்டியராஜன் திறந்து வைத்தாா்.
செங்கல்பட்டுபெரும்பாக்கத்தில் ‘அம்மா’ சிறு மருத்துவமனை: அமைச்சா் திறந்து வைத்தாா்
மதுராந்தகத்தை அடுத்த பெரும்பாக்கம் ஊராட்சியில் ‘அம்மா’ சிறு மருத்துவமனையை தமிழ் வளா்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சா் க.பாண்டியராஜன் திறந்து வைத்தாா்.
மதுராந்தகத்தை அடுத்த பெரும்பாக்கம் ஊராட்சியில் ‘அம்மா’ சிறு மருத்துவமனையை தமிழ் வளா்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சா் க.பாண்டியராஜன் திறந்து வைத்தாா்.
தமிழகம் முழுவதும் 2,000 ‘அம்மா’ சிறு மருத்துவமனைகளைத் திறக்க முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் 40 இடங்களில் அம்மா சிறு மருத்துவமனைகளைத் திறக்க சுகாதாரத் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், பெரும்பாக்கம் ஊராட்சியில் அமைக்கப்பட்ட ‘அம்மா’ சிறு மருத்துவமனையை அமைச்சா் க.பாண்டியராஜன் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.